Thursday, May 13, 2010

மெழுகுவர்த்தி நாம்




நிகழ் காலத்தை தொலைத்துவிட்டு
எதிர்காலத்தை தேடுகின்றோம்

பாச வலைகளை முதுகில் சுமந்து ஆசை
வலைகளுக்குள் அகப்பட்டுவிட்டோம்

அன்னை தந்தை தம்பி தங்கை முகங்களை
படங்களை பார்த்து புன்னகை புரிகிறோம்

புது புது உறவுகள் முளைத்துவிட்டன
கார்மேகமாய் மனம் கருத்துபோனத்தில்

தந்தை கொஞ்சும் மீசை முத்தம்
அந்த பிஞ்சு முகத்தில் பதியவில்லை
அந்த செல்போனுக்கு புரிந்தது

பல வருடங்கள் கழித்துவரும் மகனை பார்த்து
கண்ணீர்விடும் அன்னை உள்ளம்

மாமா என்று சொல்லும் மகனை பார்த்து
கண்ணீர்விடும் மனைவியின் உள்ளம்

உறவுகள் கூடி புதுமையாய் பார்க்கும் நம்மை
மாற்றம் நம் உடம்பில் மட்டும்மல்ல
நம் வாழ்க்கையிலும்.

பிரபுமுருகன்............

1 comment:

  1. வரிகள் அருமையா இருக்கு தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete