Thursday, June 10, 2010

குடிமகனே குடியாதே







குடி தினம் தண்ணீரை குடி
தூய்மையாகும் சிறுநீரக பணி

வியர்வைத்துளிகளை சிந்தி
குடிக்கின்றாய் கொஞ்சம் சிந்தி

மது குடித்தால் உடல் கெடும்
தினம் குடித்தால் உயிர் விடும்

மதுவில் இருப்பது எரிசாராயம்
குடல் எரிப்பதே அதன் தோராயம்

அன்புக்காய் கற்றுக்கொண்டால்
அடிமையாய் சிக்கிக்கொல்வாய்

தள்ளாடி தள்ளாடி தடுமாறி நீ வீடுவர
உள்ளக்காயங்கலோடு உன்மனைவி

மது அருந்திச் செல்லும் குவளையை
மகன் கழுவிச்சுவைதிடும் திவலைகள்

நீ குடிமகன் என்பதால் குடிக்கின்றாயோ
குடியானவள் குடித்தால் பெண்ணாகுமோ

எதை மறக்க நீ குடிக்கின்றாய் மது, மாது
உன்னை நினைந்தே கண்ணீர் வடிக்கின்றாள்

வீதியில் விழுந்துகிடப்பது நீ மட்டுமில்லை
உன்குடும்பத்தொடு தலைநிமிர முடியாமல்

பிரபுமுருகன்............

No comments:

Post a Comment