
என் கண்களும் உன் கண்களும்
மோதவில்லை
என்சுவசமும் உன்சுவசமும்
மெய் தீண்டவில்லை
என் கைகளும் உன்கைகளும்
பற்றிக்கொள்ளவில்லை
என் உடலும் உன் உடலும்
சந்திக்கவில்லை
என் இரவில் நீ கனவில்
வருவதில்லை
எந்த தொடர்பும் இல்லாமல்
தட்டச்சில் என் இதயம்
தவிக்கவிடுகின்றாய்
எழுத்துக்களில் உண்முகங்களை
பதித்துவைத்து
தீண்டலாய் திருடலாய்
அனுப்பிவைத்தாய்.
பிரபுமுருகன்.........
No comments:
Post a Comment