
உனது எனது
கண்களை மட்டும்
மறைக்கவில்லை
நம் கால்களையும்
வாரிக்கொண்டது
உனக்காய் எனக்காய்
எல்லாம் கொடுக்க
நினைத்த மனசு ஏனோ
விட்டுக்கொடுக்க
மறந்தது
எங்கிருந்தது கோபம்
உன்னோடு சிரிக்க
உன்னோடு பழக
உன்னோடு வாழ
நினைக்கும்பொழுது
கோபம் எனக்காய் கொடுத்தது
உன்பிரிவையும் - வெறுமை
நினைப்பையும்
கோபத்தால்
தினம் வதைபடும் மனம்
பிரபுமுருகன்................
No comments:
Post a Comment