
பச்சை குடைபிடிக்கும்
ஒருவழிச்சாலை
காலை மணி ஒலிக்கும்
மார்கழிவேளை
ஊரார் கூப்பி நிற்கும்
விநாயகர் ஆராதனை
கூட்டமாய் குளிர்காயும்
சொக்கப்பன் ஓலை
குமரிப்பெண்ணின் அதிகாலை
கோலங்கள்
கலப்பையோடு வயல்வெளியில்
உழவன்
வரப்புகளில் வழிந்தொழுகும்
பனித்துளிகள்
ஆதி மனிதனாய் கண்மாய்
குளியல்
ஆலமரத்தின் விழுதில்
ஊஞ்சல் ஆட்டம்
தொலைதூர பள்ளியின்
நடைபயணம்
காத்திருக்கும் விடுமுறை
காலம்
உயர்ந்து நிற்கும்
பனைமரக்கூட்டம்
அடை மழையில்
குடைபிடிக்கும் கோணிப்பை
ஊர்நடுவே ஓடிவரும்
மழைநீர் வெள்ளம்போல்
அரபிக் கடல் கொடுத்த
வியர்வை துளிகளை
பசுமை நினைவுகளால்
பசுமை நினைவுகளால்
உலர்த்திக்கொள்கின்றேன்
அடுக்கு மாடி குடியிருப்பும்
அடைத்துவைத்த குளியலறையும்
அடுக்கு மாடி குடியிருப்பும்
அடைத்துவைத்த குளியலறையும்
கல் பதித்த நடைபாதையும்
கண்டுக்கண்டு கல்லாகிப்போன
எம்நெஞ்சை,
கண்டுக்கண்டு கல்லாகிப்போன
எம்நெஞ்சை,
கிராமத்தின் பசுமை நினைவுகள்
கல்லுக்குள் நீர்போல கசிகின்றது.
பிரபுமுருகன்.......................
கல்லுக்குள் நீர்போல கசிகின்றது.
பிரபுமுருகன்.......................
No comments:
Post a Comment