
வறட்சியின் பிடியில்
உயிர் விடும் நிலையில்
உன்னைக்கண்டேன்
சிறிது நீர் கொடுத்து
உன் முகம் கழுவி
அழைத்துவந்தேன்
தினமும் உன்னை
கவனிக்கிறேன் உன்
படர்ந்த மேனியின்
அழகைப்பார்த்து
நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாய் உன் அழகும்
என்னை கொள்ளை கொண்டது
இன்று என் வரவை பார்த்து
நாணம் கொண்டு நிற்கிறாள்
பூப்பெய்தவலாய் செம்பருத்தி ...
பிரபுமுருகன்...............
No comments:
Post a Comment