Thursday, June 10, 2010

எந்த தொடர்பும் இல்லை




என் கண்களும் உன் கண்களும்
மோதவில்லை

என்சுவசமும் உன்சுவசமும்
மெய் தீண்டவில்லை

என் கைகளும் உன்கைகளும்
பற்றிக்கொள்ளவில்லை

என் உடலும் உன் உடலும்
சந்திக்கவில்லை

என் இரவில் நீ கனவில்
வருவதில்லை

எந்த தொடர்பும் இல்லாமல்
தட்டச்சில் என் இதயம்
தவிக்கவிடுகின்றாய்

எழுத்துக்களில் உண்முகங்களை
பதித்துவைத்து

தீண்டலாய் திருடலாய்
அனுப்பிவைத்தாய்.

பிரபுமுருகன்.........

No comments:

Post a Comment