Monday, June 28, 2010

நாவடக்கம்

எலும்பில்லாத நாக்கு
எதையும் சொல்லும்
எப்படியும் சொல்லும்

உண்மை சொல்லிப்பார்
உன் உள்ளம் மகிழும்

போய் கூரும்முன்னே
நாவே உலரும்

வார்த்தைகளின் உருவங்களாய்
நாவின் நளினம்

சுவைகளின் நிறங்களாய்
நாவின் பயணம்

நாவு நீலக் கூடாதென்பதே
அடக்கமாய் உள்ளமர்வு

நாவு அடக்கம் பெற்றால்
நல்லொழுக்கம் உயர்வு பெரும்

நல்லொழுக்கமே நற்ப்பெயரை
விதைக்கும்

வள்ளுவன் பாடிவைத்த வைர
வரிகளாய்

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

Friday, June 25, 2010

போர்க்களம்



போர்க்களம்
என்னவளின் இதழால் மலரினுள்

பாதஅடியினால் மண்துகள்களுக்குள்

கூந்தளினால் பட்டுபூச்சிகளுகுள்

அவள்வாசனையால் பூக்களுக்குள்

இடைஅழகால் அன்னபறவைகுள்

உடல்நிறதினால் செர்ரிபழத்தினுள்

பார்வைகளால் என்கண்களுக்குள்

என்னவளினால் இதயத்தினுள் மூண்டது
=====>> போர்

Monday, June 21, 2010

ஹைகூ கவிதை





தன் உணவிற்காக (சுயநலம்)
பாவம் கர்ப்பிணி கழுத்தில் கூட கவட்டை
குழை தள்ளிய வாழை மரம்



நாங்கள் தொட்டாலும் சுருங்குகிறாய்
காற்று பட்டாலும் சுருங்குகிறாய்
நாங்கள் என்ன தீண்டதகாதவர்களா ?
தொட்டாசுருங்கி செடி

Friday, June 18, 2010

மனைவி




பரந்துவிரிந்த உலகத்தில் உள்ள
சூரியன் நிலவுபோல வாழும்

மன சிந்தனையில் உள்ள
பசுமையான நினைவில் வாழும்

நேசத்திற்கு முகவரியாய் உள்ள
பாசத்திற்கு உரியவளாய் வாழும்

கண் கருவிழிகளில் உள்ள
விழித்திரையின் ஒளியாய் வாழும்


உன்னதமலர் தான் என் ----- மனைவி

Friday, June 11, 2010

அதிசய மலர்



















ரோஜாவின்
இரண்டு இதழ்
புன்னகையில் மலர்ந்து
வார்த்தைகளில்
மனம்வீசுகிறாள்.

பிரபுமுருகன்........

Thursday, June 10, 2010

மாண்புமிகு மனிதன்






உருவமில்லாமல் உறங்கியது
கல்லுக்குள் தெய்வம்,
உளி கொண்டு உறக்கம்
கலைத்து, விழி கொண்டு
வீரம் புகட்டி, பெயர்கொண்டு
பெருமை தந்து, நிலையென்று
நிறுத்திவைத்தான்,
காவல்தெய்வமாய்.

பிரபுமுருகன்.........

வழியெங்கும் விழி சிந்தி


















சின்ன சின்ன நீர்த் திவலையை

பூவிதழ் சிந்தும் பனித்துளியை

பருகிக் களிக்கும் கதிரவன் விழி-போல

பெண்ணே! உன் இதழ் சிந்தும்

புன்னகை பருக வழியெங்கும் விழி

வைத்து நிற்கிறேன்.

பிரபுமுருகன்.............

உன்னை தேடி தேடி






இரவும் பகலும்
உனை தேடி தேடி
என் இதய ஓட்டம்
நின்றதடிப் பெண்ணே!

பிரபுமுருகன்......

எச்சப்படுதுவது யார்






சிலைமீது எச்சமிடும்
பறவைக்கு தெரிவதில்லை
தேசப்பற்று தலைவரென்று

சாதியின் பெயரைச்சொல்லி
எச்சில் படுத்தும் மனிதர்க்கூட்டம்
தெரிந்தே தேசம் போற்றும்
தலைவரென்று

பிரபுமுருகன்........

குடிமகனே குடியாதே







குடி தினம் தண்ணீரை குடி
தூய்மையாகும் சிறுநீரக பணி

வியர்வைத்துளிகளை சிந்தி
குடிக்கின்றாய் கொஞ்சம் சிந்தி

மது குடித்தால் உடல் கெடும்
தினம் குடித்தால் உயிர் விடும்

மதுவில் இருப்பது எரிசாராயம்
குடல் எரிப்பதே அதன் தோராயம்

அன்புக்காய் கற்றுக்கொண்டால்
அடிமையாய் சிக்கிக்கொல்வாய்

தள்ளாடி தள்ளாடி தடுமாறி நீ வீடுவர
உள்ளக்காயங்கலோடு உன்மனைவி

மது அருந்திச் செல்லும் குவளையை
மகன் கழுவிச்சுவைதிடும் திவலைகள்

நீ குடிமகன் என்பதால் குடிக்கின்றாயோ
குடியானவள் குடித்தால் பெண்ணாகுமோ

எதை மறக்க நீ குடிக்கின்றாய் மது, மாது
உன்னை நினைந்தே கண்ணீர் வடிக்கின்றாள்

வீதியில் விழுந்துகிடப்பது நீ மட்டுமில்லை
உன்குடும்பத்தொடு தலைநிமிர முடியாமல்

பிரபுமுருகன்............

கோபம்





உனது எனது
கண்களை மட்டும்
மறைக்கவில்லை
நம் கால்களையும்
வாரிக்கொண்டது

உனக்காய் எனக்காய்
எல்லாம் கொடுக்க
நினைத்த மனசு ஏனோ
விட்டுக்கொடுக்க
மறந்தது

எங்கிருந்தது கோபம்
உன்னோடு சிரிக்க
உன்னோடு பழக
உன்னோடு வாழ
நினைக்கும்பொழுது

கோபம் எனக்காய் கொடுத்தது
உன்பிரிவையும் - வெறுமை
நினைப்பையும்

கோபத்தால்
தினம் வதைபடும் மனம்


பிரபுமுருகன்................

எந்த தொடர்பும் இல்லை




என் கண்களும் உன் கண்களும்
மோதவில்லை

என்சுவசமும் உன்சுவசமும்
மெய் தீண்டவில்லை

என் கைகளும் உன்கைகளும்
பற்றிக்கொள்ளவில்லை

என் உடலும் உன் உடலும்
சந்திக்கவில்லை

என் இரவில் நீ கனவில்
வருவதில்லை

எந்த தொடர்பும் இல்லாமல்
தட்டச்சில் என் இதயம்
தவிக்கவிடுகின்றாய்

எழுத்துக்களில் உண்முகங்களை
பதித்துவைத்து

தீண்டலாய் திருடலாய்
அனுப்பிவைத்தாய்.

பிரபுமுருகன்.........

Monday, June 7, 2010

சிரம் உன்மடியில்






சிறகடித்து திரிந்தவனை உன்

சிந்தையில் ஆழ்த்திவிட்டு

சிற்ப்பங்கள் வடித்தவனை

சிலையாய் நிற்க வைத்து

சிர்ப்பிக்குள் முத்தை போல ௦

சித்தத்தில் நுழைந்தவளே

சிகரத்தில் ஏற்ற என்னை

சீர்துக்கி வளர்த்தவளே

சின்ன இதழ் பேச்சால் என்

சிரம் உன்மடியில்..................