Saturday, May 1, 2010

அவள் கண் விதுப்பழித்தல்


பட்டாம் பூச்சியின் இமை,
அவள் இமைத்தால்
அதில் உதிர்ந்தது என் மனசு

கூறிய வாளின் முனை அழுத்தம்
ஒரு பார்வை

உச்சி வெயிலில் உதிர்ந்திடும் பணி
மழையாய் ஒரு பார்வை

உள்ளக்குளிருக்குள்ளே கோடை
வெப்பமாய் ஒரு பார்வை

முகம் மூடிய உறைக்குள் கயிற்றின்
இறுக்கம் ஒரு பார்வை

அடிக்கின்ற காற்றில் வெடித்து விழும்
பஞ்சு போல ஒரு பார்வை

தூண்டில் முள்ளில் அகப்பட்ட மீன்
துள்ளலாய் ஒரு பார்வை

உதிர்ந்து விழும் பூ, நிலத்தின்
காயமாய் ஒரு பார்வை

முழு நிலவின் ஒளிவெள்ளமாய்
ஒரு பார்வை

உடைபட்ட கரையில் உருண்டோடும்
வெள்ளமாய் ஒரு பார்வை

பார்த்துக்கொடிருக்கின்றால்

பிரபுமுருகன்................

No comments:

Post a Comment