Sunday, May 2, 2010

தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன்



மனிதா
தெய்வத்தின் புனிதம்
கெடுத்தவன் நீ
அவனை உன்னால்
பார்க்கமுடியவில்லை
என்பதற்காகவே

கல்லை உன்போல
வடிவம்தந்து
காகிதத்தில் அதுபோல
சித்திரம் வரைந்து

கடைகளிலும்
கடைத்தெருவிலும்
அவன் பெயர் சொல்லி
விற்று பிளைக்கிராயே

தெருவுக்கு தெருவு
ஆலையங்கள் கட்டுகிறாய்
அதையே மீண்டும் சாலைகள்
வருகின்றதென்று தகர்க்கின்றாய்

காவிகள் கட்டியவறெல்லாம்
சாமிகள் என்று புகழ் பாடுகிறாய்
காவிகள் வெளுத்ததும் அவனையே
போலிகள் என்று சூரையாடுகிறாய்

மனிதா
தெய்வத்தின் புனிதம்
கெடுத்தவன் நீ

இந்த பிரபஞ்சம் முழுவதும்
பறந்து கிடக்கின்றாவனை
ஒரு அறையில்
அடைத்துவிட முடியாது

சாணத்தை கையில் பிடித்து
வணங்கியவன் கண்ணுக்கு
கடவுளாக தெரிந்தவன்

பளிங்கு கற்க்களிலும்
வண்ண வண்ண விளக்குகளிலும்
வானுயர சிலைகளிலும்
கடவுள் காட்சி தருவானேன்பது
உன் மடமையே


பிரபுமுருகன்...............

No comments:

Post a Comment