Saturday, May 1, 2010
இறந்தும் வாழ்ந்தவள்
அழகை உடலாக
வண்ணமோ ஆடையாக
மென்மையோ இதழாக
மனமே கவர்ச்சியாக பிறந்தவள்
தெய்வ ஆராதனையாக
தேவியரின் கூந்தளுக்காக
மாய்ந்தவரின் அஞ்சலியாக
காதலின் சின்னமாக
மனங்களின் மாழையாக
தன் உயிர் அறுத்து
இரு உயிர் தொடுத்து
மடிந்துவிடும் மலராக
மனித மனம்வேண்டும்.
இதன் உட்கருத்து :
ஒருநாள் வாழ்க்கையில் மலர்
இத்தனை தியாகங்கள்(பலன்களை)
இறந்தபின் கொடுத்து செல்லும்பொழுது
ஆண்டுகள் பல வாழும் நம் உடல்
உறுப்புக்கள்
எத்தனை எத்தனை நன்மைகளை
கொடுத்துச் செல்லவேண்டும்
இறந்தபின் உடல் தானம் செய்வோம்
பல உயிர்களில் வாழ்ந்துநிர்ப்போம்
பிரபுமுருகன்...............
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment