Saturday, May 1, 2010
என் இலையுதிர்காலம்
வான் மழை போழியச்செய்தேன்
வானம்பாடிகள் உறங்கச்செய்தேன்
இழப்பார நிழலைத் தந்தேன்
உயிர்வாழ காற்றைத் தந்தேன்
என் நிழல் கூட இன்று இல்லை
இலையுதிர் காலம் என்பதால்
பணம் இருந்தது பாசம் தெரிந்தது
உடனிருந்தது உண்டு களித்தது
நட்பு வளர்ந்தது நகமோடு சதையென்றது
பணம் குறைந்தது பாசம் வெளுத்தது
நட்பு நரைத்தது நாடகம் முடிந்தது
உச்சிவேயிலென்றால் நிழல்கூட வருவதில்லை
இது என் இலையுதிர்காலம்தான்
பிரபுமுருகன்................
Subscribe to:
Post Comments (Atom)
arumai nanba mika arumai prabu
ReplyDelete