Saturday, May 1, 2010

பெற்றோரின் பரிதவிப்பு


கருவிலே கால்கொண்டு
உதைத்ததை தான் மட்டும்
கண்டேன்
என்பதர்க்கா
தெருவிலே பலர்கான
நெஞ்சிலே மிதிக்கின்றாய்

பிஞ்சுக்கால்கள் நெஞ்சில்
மிதித்தபோது உன்
பாதங்களை முத்தமிட்டதற்கா
எங்களை விரட்டியடிக்கிறாய்

நீதான் எங்கள் வாழ்க்கை
நீயே எங்கள் உலகம்
என்று நினைத்தற்க்கா
உன் வாழ்க்கையை நீயே
தேடிக்கொண்டாய்

ஊரார் கண்படும் என்றுதான்
தினந்தோறும் திருஷ்டி
கழித்தோம், ஒருத்தியின்
கண்பட்டு உடைத்தாயே
எங்கள் மண்டையை

ஓங்கி சிரிக்காத
எங்கள் வாழ்க்கை
என்று ஊரார் கைகொட்டி
சிரிக்க வைத்தாயோ

தவம் இருந்து
பெற்றதனாலையே
எங்களை கோவில்
கோவிலாய் அலையவிட்டாயோ

தெய்வமே!
உன்னிடம் பிச்சை கேட்டு
பெற்றமகன் எங்களை பிச்சை
எடுக்க வைத்ததேனோ

இன்று நீ
நாளை அவன்
உலகம் சுற்றும்

பிரபுமுருகன்.............

No comments:

Post a Comment