Saturday, May 8, 2010

காதல் பண்பலை



காதல்
உணர்வுகளால் எழுப்பப்படும்
பண்பலை

இதய துடிப்புகள்
இசைகலாய் ஒலிக்க

மௌனம் கவிதைகளாய்
கண்களில் மொழிபெயர்க்கும்

தேன்போல காதல்,
சுவைப்பதற்கு சில
தேனீக்களில் தீண்டல்கள்
தாங்கிக்கொள்.

பூப்போல காதல்
மென்மையானது,
அழகானது,
அதன் செடியைப்போல்
பிரிவையும் ஏற்றுக்கொள்.

தென்றல் போல காதல்
உள்ளம் வருடிச்செல்லும்,
தென்றல் புயலாக வரும்பொழுது
இலைபோல எதிர்த்து நில்.

ஒற்றை நிலவாய் காதல்
உலாவரும் இரவுகள்
ஒளிமயமானது, ஓர் நாள்
நிலவில்லா தனிமையையும்
தாங்கிகொள்.

உன்காதல்
மணமாழைகளாய்
பௌர்ணமி நிலவொளியில்
தேன்குடிக்கும்.

பிரபுமுருகன்.................

No comments:

Post a Comment