Saturday, May 1, 2010

துளித்துளியாய்


துளித்துளியாய் மழை
பெய்தாலும்
துளிகளெல்லாம் ஒன்றாய்
தேடுவது ஒரு அடைக்கலம்

குளமாக ஏரியாக
அருவியாக ஆறாக
மழைத்துளி நிறைந்தாலும்

கடலில் சங்கமம்
ஆனபிறகே அதன்
தேடல் முடிவடைகிறது

தனித்தனி மனிதானாய்
பிறந்தாலும் அன்பைத்தேடி
மனிதமனம் நாடிச்செல்கிறது

தாயக, நட்பாக
காதலாக, மனைவியாக
அன்போடு கலந்தாலும்

பக்த்திக்கடலில் கலந்தபின்னே
கடவுளின் ஆன்மாவோடு
சங்கமமாகின்றது

பிரபுமுருகன்.................

No comments:

Post a Comment