Saturday, May 8, 2010

மலரோடு காதல் ஒப்பீடு






செடிவளர அரும்புவந்தது

என்வயதுவளர இளமைவந்தது,

தென்றல் மோதிட மொட்டு மலர்ந்தது

அவள் கண்கள் மோதிட காதல் மலர்ந்தது,

மலர் கொடுத்தது தேனும்
மனமும்
என்காதல் தந்தது இன்பமும்
துன்பமும்,

மலர்
வாடிப்போனது பலர் காணும்பொழுது
மலர்ந்துவிடுவது காணாபொழுது,

காதல்
வாடிப்போனது அவளை காணாபொழுது
மலர்ந்துவிடுவது காணும்பொழுது,

மலர்ந்துவிட்ட மலர் மங்கையின்
கூந்தலை அடைந்தது,

சொல்லிவிட்ட காதல் பெண்ணவள்
இதயத்துள் நுழைந்தது,

ஒரு செடியில் பல பூக்கள்
பூக்கலாம்
ஆனால்
என் காதல் பூத்தது
ஒருமுறைதான்.....

பிரபுமுருகன்.....................

No comments:

Post a Comment