Saturday, May 1, 2010

கனவு


கண்கள் உறங்கியவேளை
நினைவு பிம்பங்கள்
இறந்தகாலம் முதல்
எதிர்காலம் வரை
பயணிக்கும் நேரம்.

கண்திறந்த உலகத்தில்
கூலி நீ என்றாலும்
கண்மூடிய நேரத்தில்
கோமகனாய் நீவருவாய்

பள்ளி மாணவனாய் நீ இருந்தால்
மாநிலத்தில் முதல் மதிப்பெண்
நீ எடுக்க காண்பாய்

காதல் அரும்பு கட்டியவன்
நீ என்றால் காதலியின்
தலை சூடி மகிழ்வாய்

ஓர்நாள் உன்தாய் மடியில்
பிறக்க காண்பாய்
மறுநாள் உன்தாய் மடியில்
இறக்கவும் காண்பாய்
மரணத்தையும் ஜனனத்தையும்
காட்டும் நேரம்

சிறகுகள் இல்லா மனிதஉடல்
வானம்நோக்கி பறந்துசெல்லும்
ஏனோ கண்கள் விழித்ததினால்
கழுதையின் கானமகிப்போவதேங்கே

கனவு

பிரபுமுருகன்........

1 comment: