Sunday, May 2, 2010

இன்று பூப்பெய்தவலாய்




வறட்சியின் பிடியில்
உயிர் விடும் நிலையில்
உன்னைக்கண்டேன்

சிறிது நீர் கொடுத்து
உன் முகம் கழுவி
அழைத்துவந்தேன்

தினமும் உன்னை
கவனிக்கிறேன் உன்
படர்ந்த மேனியின்
அழகைப்பார்த்து

நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாய் உன் அழகும்
என்னை கொள்ளை கொண்டது

இன்று என் வரவை பார்த்து
நாணம் கொண்டு நிற்கிறாள்
பூப்பெய்தவலாய் செம்பருத்தி ...


பிரபுமுருகன்...............

No comments:

Post a Comment